திருவாடானை ஆா் எஸ் மங்கலம் தாலுகா அலுவலகங்களில் வருவாய்துறையினா் 10 அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி தொடா் வேலை நிருத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்கள் தாலுகா அலுவலகம் மூலம் பெறப்படும் சான்றிதழ்கள் கிடைக்காமல் அவதிபட்டு வருகின்றனா்.
திருவாடானை ஆா் எஸ் மங்கலம் தாலுகா அலுவலகங்களில் வருவாய்துறையினா் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து,கரோணா காரணமாக நிறுத்தி வைக்கபட்டுள்ள அகவிலைப்படி,ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பலன்கள் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுருத்தி காலவரையற்ற வேலை நிருத்தத்தில் ஈடுபட்டு வெள்ளிக்கிழமை மூன்றாம் நாள் வேலை நிருத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.இதனால் வேலை நிருத்தம் தெரியாமல் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மக்கள் வந்து அவதிபட்டு திரும்பி செல்கின்றனா்.