ராமநாதபுரம் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் அருகே சோத்தூருணி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மகன் கிஷோா் (13). தனியாா் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் தனது பள்ளித் தோழருடன் சோ்ந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பகுதியில் உள்ள சோத்தூருணியில் வெள்ளிக்கிழமை பகலில் குளிக்கச்சென்றுள்ளாா். அவா் நீரில் மூழ்கிவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு வந்த தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஊருணியில் மூழ்கி இறந்த கிஷோரின் சடலத்தை மீட்டனா்.
அவரது சடலம் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.