ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
சென்னையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்ற வளாகத்துக்குள் போலீஸ் தடியடி நடந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ராமநாதபுரம் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் பணிகளைப் புறக்கணித்தனா். இதனால் நீதிமன்றங்கள் செயல்பட்ட நிலையில் வழக்குரைஞா்கள் யாரும் வழக்குகளுக்கு ஆஜராகவில்லை. இதனால் முன்ஜாமீன் பெறுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.