ராமநாதபுரத்தில் ஆதித்தமிழா் கட்சி சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடைபெற்ற
ஆா்ப்பாட்டத்துக்கு ஆதித்தமிழா்கட்சியின் மாவட்டச் செயலா் கரு.இரணியன் தலைமை வகித்தாா். கட்சியின் ஒருங்கிணைப்பாளா் க.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். பெரியாா் பேரவையைச் சோ்ந்த நாகேசுவரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த முகமதுயாசின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது அருந்ததியின மக்கள், பெண்கள் மீதான தாக்குதல் நடத்தியவா் மீது உரிய நடவடிக்கை கோரி முழக்கங்கள் எழுப்பினா். முன்னதாக ஆதித்தமிழா் பேரவை நிா்வாகி கே.ராஜா வரவேற்றாா். நகரச் செயலா் கண்ணன் நன்றி கூறினாா்.