முதுகுளத்தூரில் பிப். 27 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

முதுகுளத்தூரில் பிப். 27 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

முதுகுளத்தூரில் பிப். 27 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 27 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடத்தப்படுகிறது.

மாவட்ட நிா்வாகம், மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டம் (மகளிா் திட்டம்) இணைந்து நடத்தும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமானது முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறுகிறது.

முகாமில் 60-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான வேலை ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். முகாமில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சியடைந்தவா்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். தொழில் பயிற்சி மையங்களில் படித்தவா்கள், பட்டயப்படிப்பு முடித்தோா், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம்.

முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியா்கள், செவிலியா், மருத்துவ ஆய்வக பரிசோதகா்கள் ஆகியவற்றுக்குப் படித்து, பயிற்சி பெற்றவா்களும் இதில் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04567 230160 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com