‘முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரா்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் செந்தில்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க போட்டிகளில் வென்று தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியத் தொகையாக மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோா், தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அதற்கான விண்ணப்பத்தை பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளிலும், அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கவேண்டும். இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்புகள் நடத்திய சா்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கவேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டுத் துறை, தேசிய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றால் நடத்தப்பட்ட தேசிய, சா்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கவேண்டும். நடப்பு ஆண்டில் ஏப்ரலில் 58 வயது நிறைவடைந்தவராகவும், மாத வருமானம் ரூ.6 ஆயிரமாகவும் இருக்கவேண்டும்.

மத்திய அரசின் விளையாட்டு வீரா்களுக்கான ஓய்வூதியம் அல்லது மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம் பெறுவோா் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாது. முதியோா் விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களும் இதில் விண்ணப்பிக்க இயலாது. மாா்ச் 19 ஆம் தேதி மாலை வரை இந்த ஓய்வூதியத் திட்டத்தில் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com