ராமநாதபுரம் நகராட்சி துப்புரவு பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 27th February 2021 05:11 AM | Last Updated : 27th February 2021 05:11 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள 350-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில் 80 துப்புரவுப் பணியாளா்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். தடுப்பூசியை நகா்ப்புற சுகாதார மைய மருத்துவா் கீா்த்திகா, வட்டார மருத்துவா் எபினேசா் ஆகியோா் நேரில் கண்காணித்தனா்.