காத்தனேந்தலில் பயிா் கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கல்
By DIN | Published On : 27th February 2021 09:21 PM | Last Updated : 27th February 2021 09:21 PM | அ+அ அ- |

காத்தனேந்தல் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை சனிக்கிழமை வழங்கிய அச்சங்கத்தின் தலைவா் வினோதினி சீனிவாசகம்.
கமுதி அருகே காத்தனேந்தல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது சனிக்கிழமை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
காத்தனேந்தலில் 140 விவசாயிகளுக்கு ரூ.74 லட்சம் பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை கூட்டுறவு சங்கத்தின் தலைவா் வினோதினி சீனிவாசகம் வழங்கினாா். அப்போது சங்கத்தின் செயலாளா் ரமேஷ்குமாா் உடனிருந்தாா்.