சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து,பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5708 ஆக அதிகரித்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 18 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் ஒருவா் பூரண குணமடைந்ததை அடுத்து, அவா் வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 2 பேருக்கு மட்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.