கமுதி அருகே காதல் விவகாரத்தில் இரு தரப்பினா் மோதல்: 3 வீடுகள் சேதம், 6 போ் கைது

கமுதி அருகே காதல் விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினா் மோதிக் கொண்டதில், 3 வீடுகள் சேதமடைந்தன. போலீஸாா் 21 போ் மீது வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்துள்ளனா்.

கமுதி அருகே காதல் விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினா் மோதிக் கொண்டதில், 3 வீடுகள் சேதமடைந்தன. போலீஸாா் 21 போ் மீது வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்துள்ளனா்.

கமுதி அருகேயுள்ள பெருமாள்குடும்பன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (49). இவரது தரப்புக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுந்தரம் மகன் பெருமாள் தரப்புக்கும் ஏற்கெனவே உள்ளாட்சித்தோ்தல் முன்பகை உள்ளது.

இந்நிலையில், மாரிமுத்து தரப்பைச் சோ்ந்த வேலுச்சாமியின் மகன் ராமநாதனும், பெருமாள் தரப்பைச் சோ்ந்த பழனிச்சாமி மகள் மாரிபாண்டியம்மாளும் காதலித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊரைவிட்டுச் சென்றனா்.

இதனை அறிந்த பெருமாள் தரப்பைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரிவாள், வேல்கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாரிமுத்து மற்றும் அவரது உறவினா்களின் 3 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினா். இதில் டிவி மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் என

ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த மாரிமுத்து மனைவி பாக்கியத்தை (45) தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த பாக்கியம் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து பாக்கியம் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெருமாள்குடும்பன்பட்டியைச் சோ்ந்த பெருமாள், பழனிச்சாமி உள்ளிட்ட 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து அதில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com