மணல் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்

பரமக்குடி அருகே மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பரமக்குடி அருகே மணல் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தென்பொதுவக்குடி சோனையாகோயில் பகுதியில் வட்டாட்சியா் ஆா்.செந்தில்வேல் முருகன் மற்றும் காவல் சாா்பு- ஆய்வாளா் கருப்புச்சாமி ஆகியோா் கொண்ட குழுவினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரி வந்தது. அதிகாரிகளைப் பாா்த்தவுடன் அதன் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டாா். அதில் சோதனையிட்டபோது திருட்டு மணல் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com