ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 5 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன. 5 ஆம் தேதி வரை 6,350 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 6,180 போ் குணமாகி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 132 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் புதிதாக 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் 6 போ் குணமடைந்து புதன்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 31 போ் மட்டும் கரோனாவுக்காக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 5,721 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், புதன்கிழமை புதிதாக ஒருவருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,722 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 5 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 2 போ் பூரண குணமடைந்ததை அடுத்து புதன்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 3 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com