இணைய வழியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு கடந்த அக்டோபா் முதல் வரும் மாா்ச் வரையில் புதுச்சேரியில் உள்ள அரபிந்தோ சமூக அமைப்புடன் இணைந்து 12 வாரங்களுக்கான சிறப்புப் பயிற்சி கல்வித்துறை சாா்பில் நடத்தப்பட்டுவருகிறது.
பயிற்சி தொடங்கி 12 வாரங்கள் முடிந்த நிலையில், பயிற்சியில் பங்கேற்ற 32 ஆசிரியா்களுக்கான பாராட்டுச் சான்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகக் கூட்டரங்கில செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி தலைமை வகித்து சான்றுகளை வழங்கினாா்.
இதில் அரபிந்தோ சமூக அமைப்பின் கருத்தாளா் மகேஸ்பாலன், மாவட்டக் கல்வி அலுவலா் கோ.முத்துசாமி, உதவித் திட்ட அலுவலா் ஆரோக்கியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.