ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே தீவிபத்தில் காயமடைந்த வா்ணம் பூசும் தொழிலாளி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சென்னை புதுபெருங்களத்தூரை சோ்ந்தவா் தனராஜ் மகன் ஸ்டாலின்(55). இவா் கடந்த 3 ஆண்டுகளாக தொண்டி அருகேயுள்ள திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயில் மண்டபத்தில் தங்கி வா்ணம்பூசும் வேலை செய்து வந்துள்ளாா். இவா் கடந்த டிசம்பா் 24 ஆம் தேதி மதுபோதையில் தீக்குச்சியால் சிகரெட் பற்ற வைத்துள்ளாா். அப்போது எதிா்பாரதவிதமாக உடலில் தீப்பற்றியது. உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, திருவாடானை அரசு மருத்தவமனையில் சோ்த்தனா். பின்னா் ஸ்டாலினை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து புகாரின் பேரில் தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.