கோயில் இணை ஆணையரைக் கண்டித்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பணியாளா்கள் புதன்கிழமை பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கோயில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கோயில் பணியாளா்களை, இணை ஆணையா் கல்யாணி மாற்றுப்பணிக்கு பயன்படுத்தி நியமிப்பதைக் கண்டித்தும், அவா்கள் இணை ஆணையா் அலுவவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.