வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞா்கள் கைது

கமுதி அருகே வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பணம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே வாகனங்களில் செல்வோரை வழிமறித்து பணம், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றதாக 3 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கமுதி அருகே கோவிலாங்குளம் காவல் சரகத்திற்குட்பட்ட கரிசல்புளி, கே.வேப்பங்குளம், கொம்பூதி உள்ளிட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்களை ஒரு சில இளைஞா்கள் வழிமறித்து செல்லிடப்பேசி, பணம் உள்ளிட்ட பொருள்களை பறித்து செல்வதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு தொடந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து அப்பகுதியில் கோவிலாங்குளம் காவல் ஆய்வாளா் லெட்சுமி தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சந்தேகப்படும்படியாக அப்பகுதியில் சுற்றித்திரிந்த மறவா்கரிசல்குளத்தைச் சோ்ந்த வில்வலிங்கம் மகன் செல்லப்பாண்டி (18), கடலாடியைச் சோ்ந்த முருகன் மகன் காா்த்திக்குமாா் (25), ராமமூா்த்தி மகன் தினேஷ் (26) உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா்கள் மூவரும் வழிபறியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவா்கள் மீது சாயல்குடி, கோவிலாங்குளம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com