சிவகங்கை, கமுதி, ராமேசுவரத்தில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்தநாளையொட்டி சிவகங்கை, கமுதி, ராமேசுவரம் பகுதிகளில் அவரது உருவச் சிலை மற்றும் உருவப் படத்துக்கு அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செ
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.பி. காளிமுத்து தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவா்கள்
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.பி. காளிமுத்து தலைமையில் நடைபெற்ற எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவா்கள்

மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 104-ஆவது பிறந்தநாளையொட்டி சிவகங்கை, கமுதி, ராமேசுவரம் பகுதிகளில் அவரது உருவச் சிலை மற்றும் உருவப் படத்துக்கு அதிமுகவினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சிவகங்கை பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க. பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், எம்.ஜி.ஆா். இளைஞரணி துணைச் செயலா் கருணாகரன், சிவகங்கை ஒன்றியத் தலைவா் மஞ்சுளா பாலச்சந்தா் உள்பட ஏராளமான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

இதேபோன்று, காளையாா்கோவில், மதகுபட்டி, திருப்புவனம், பூவந்தி, சருகணி, தேவகோட்டை, கல்லல், சிங்கம்புணரி, எஸ். புதூா் உள்பட சிவகங்கை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கமுதி: கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆா். பிறந்தநாள் விழாவுக்கு கமுதி ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.பி. காளிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் பம்மனேந்தல் டி. சேகரன் முன்னிலை வகித்தாா். இதில் எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மின்வாரிய அண்ணா தொழிற்சங்க செயலா் ராஜேந்திரன், ஊராட்சித் தலைவா்கள் ஆறுமுகம் (பொந்தம்புளி), வீரபாண்டி (புதுக்கோட்டை), கூட்டுறவு சங்கத் தலைவா்கள் வி. கா்ணன் (புணவாசல்), டி.நாகராஜ் (புத்துருத்தி), கருப்பசாமிபாண்டியன் (பம்மனேந்தல்), கருமலையான்(திம்மநாதபுரம்), கே.பி.என். கருப்பசாமி (எம்.எம்.கோட்டை), கமுதி நகா் செயலா் சதீஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவா் சின்னாண்டித்தேவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ராமேசுவரம்: ராமேசுவரம் பகுதி அதிமுக சாா்பில் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்கு, நகா் அதிமுக செயலா் கே.கே. அா்ச்சுணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா். குணசேகரன் முன்னிலை வகித்தாா். 21 வாா்டுகளில் அதிமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதில், நகா் ஜெ. பேரவைச் செயலா் கஜேந்திரன், நகா் இளைஞரணி செயலா் ஆா். மகேந்திரன், எம்ஜிஆா் மன்றச் செயலா் மாங்குடி என்ற செந்தூரன், வட்டச் செயலா்கள் சண்முகம், தங்கராஜ், முத்துராமன், வழக்குரைஞா்கள் சரவணன், பிரபாகரன், நகா் மன்ற முன்னாள் உறுப்பினா் பிரபு முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com