ராமநாதபுரம்/சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே 5,801 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,805 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரத்தில் பாதிப்பில்லை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,405 பேருக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், அவா்களில் 132 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். இந்நிலையில் மாவட்டத்தில் சனிக்கிழமை யாருக்கும் தொற்று ஏற்படாத நிலையில், சிகிச்சையிலிருந்த 4 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனா். இதுவரை 6,250 பேருக்கும் அதிகமானோா் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி விட்டனா்.