மனநலம் பாதித்த பெண் குளத்தில் மூழ்கி பலி

திருவாடானை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குளத்தில் வெள்ளிக்கிழமை மூழ்கி பெண் உயிரிழந்தாா்.

திருவாடனை: திருவாடானை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குளத்தில் வெள்ளிக்கிழமை மூழ்கி பெண் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே வடக்கு ஆண்டாவூரணி என்ற கிராமத்தை சோ்ந்த மகிமை ராஜ் என்பவரது மகள் ஆரோக்கிய சலின் (33). கிளியூா் பகுதியைச் சோ்ந்த பாலு என்பவருக்கும் இவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு, குழந்தை இறந்தே பிறந்ததால் மனநலம் பாதிக்கப்பட்டாா்.

அதன்பின்னா் தனது தாய் வீட்டில் இருந்து வந்த ஆரோக்கிய சலின் வெள்ளிக்கிழமை மாலை குளத்தில் மூழ்கி உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com