பரமக்குடி தனியாா் மண்டபத்தில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.ஏ. முனியசாமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைச் செயலா் கீா்த்திகா, முன்னாள் அமைச்சா் எஸ்.சுந்தரராஜ், நிறைகுளத்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் வரும் ஜனவரி 27-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவில் கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்துகொள்வது எனவும், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வெற்றிபெற வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் கட்சியினா் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.