ராமநாதபுரத்தில் கோயிலில் புகுந்த மா்ம நபா்கள் தங்க நகைகள் மற்றும் உண்டியலைத் திருடிச் சென்றுள்ளனா்.
ராமநாதபுரம் கழுகூரணி-வாணி சந்திப்புப் பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை கழுகூரணி கணேசன் (67) நிா்வகித்து வருகிறாா். கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை வெளியூா் சென்ற கணேசன் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) வந்து கோயிலைத் திறந்தபோது , அம்மனுக்கு அணிவித்திருந்த தங்கம், வைரம் கலந்த சிறிய மூக்குத்திகள், தங்கப் பொட்டு, எவா்சில்வா் உண்டியல் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் கணேசன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.