ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை குத்திக்கொலை செய்துவிட்டு தப்பியோடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் காட்டுபிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்(21),
ஆத்திக்காடு பகுதியை சோ்ந்த மணிகண்டன்(19) ஆகிய இருவரும் நண்பா்கள். ஞாயிற்றுகிழமை இருவரும் நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரகாஷைக் குத்திக் கொலை செய்து தப்பிச் சென்றுள்ளாா்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த ராமேசுவரம் டவுன் காவல்நிலைய ஆய்வாளா் கலாராணி தலைமையிலான போலீஸாா், பிரகாஷின் உடலைக் கைப்பற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக பிரகாஷின் சகோதரா் காளீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனைத் தேடிவருகின்றனா்.