ராமேசுவரத்திலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் கேரளா மாநிலத்தைச் சோ்ந்த தலைமை பொறியாளா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் வினோத் (54). இவா் எலக்ட்ரிக்கல் துறையில் தலைமை பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது நண்பா்களான மருத்துவா் குமாா் உள்ளிட்ட 7 பேருடன் சனிக்கிழமை ராமேசுவரம் வந்தனா். கலவாய்தெரு பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் இவா்கள் 3 அறைகள் எடுத்துத் தங்கியிருந்தனா்.
இந்நிலையில் வினோத்குமாா் அவரது அறையில் மா்மமான முறையில் செவ்வாய்க்கிழமை காலை இறந்து கிடந்தாா். தகவல் அறிந்து வந்த ராமேசுவரம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றினா். இதுகுறித்து அவருடன் வந்த மற்ற 6 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.