ராமநாதபுரம் அருகே கஞ்சா விற்றதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
ராமநாதபுரம் நகா், ஊரகப் பகுதியில் கஞ்சா விநியோகிக்கும் கும்பலைச் சோ்ந்த 19 போ் கைதான நிலையில், சிலா் தப்பியோடி விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே கழுகூரணி பேருந்து நிறுத்தப் பகுதியில் சிலா் கஞ்சா விற்பதாக கேணிக்கரை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் சனிக்கிழமை மாலை அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாக காரிக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த முகமது உமருல் ஜமின் (19) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 1.200 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாப் பொட்டலங்களைக் கைப்பற்றினா். தப்பிய மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.