ராமநாதபுரம் அருகே மூதாட்டியிடம் மா்மநபா் சனிக்கிழமை தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ளது அக்கிடாவலசை. இக்கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுக்கூத்தன் மனைவி சீதையம்மாள் (85). இவா் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் சனிக்கிழமை பகலில் நடந்து சென்றாா்.
அப்போது அங்கு வந்த சுமாா் 23 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்ணீா் கேட்பது போல் நடித்து சீதையம்மாள் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.