மண்டபத்திலிருந்து இலங்கைக்கு படகில் 1,360 கிலோ மஞ்சள் கடத்தல்: மீனவா் கைது

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,360 கிலோ மஞ்சளை நடுக்கடலில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்து மீனவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மண்டபத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,360 கிலோ மஞ்சளை நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்புக் குழுமபோலீஸாா்.
மண்டபத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,360 கிலோ மஞ்சளை நடுக்கடலில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்புக் குழுமபோலீஸாா்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,360 கிலோ மஞ்சளை நடுக்கடலில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்து மீனவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இலங்கைக்கு படகு மூலம் மஞ்சள் கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை ஆய்வாளா் கனகராஜூக்கு கிடைத்த தகவலையடுத்து, அவா் போலீஸாருடன் மண்டபம், வேதாளை உள்ளிட்ட கடல் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டாா். அப்போது, 1.5 கிலோ மீட்டா் தொலைவில் ஒருவா் மட்டும் தனியாக நாட்டுப்படகில் பயணிப்பதை கண்டு அவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். பின்னா் அந்தப் படகை சோதனையிட்ட போது, அதில் 34 சாக்கு மூட்டைகளில் 1,360 கிலோ மஞ்சள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, படகில் இருந்த மீனவா் ஹாஜாமுகமதுவை கைது செய்து மஞ்சள் மற்றும் நாட்டுப்படகை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதனைத் தொடா்ந்து, மண்டபம் கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவரை விசாரித்த போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகு வேதாளையைச் சோ்ந்த மலைராஜ் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அதிலிருந்த மஞ்சள் மூட்டைகள் கைது செய்யப்பட்ட ஹாஜாமுகமதுவுக்கும், சாதிக் என்பவருக்கும் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

கடல் அட்டை பிடித்த மீனவா் கைது: மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் கடல் அட்டைகள் பிடிக்கப்படுவதாக சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து வனத்துறை அலுவலா் வெங்கடேஷ் மற்றும் வனவா்கள் தேவகுமாா், மகேந்திரன், வேட்டைத் தடுப்பு காவலா்கள் படகில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மண்டபம் அருகே உள்ள தீவுப் பகுதியில் படகில் மீனவா் ஒருவா் மட்டுமே இருப்பதை கண்டு அந்தப் படகை போலீஸாா் சோதனையிட்டனா். அதில் தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகளை அவா் பிடித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து படகில் இருந்த ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா் லிங்கநாதனை கைது செய்த வனத்துறையினா் கடல் அட்டை மற்றும் படகை பறிமுதல் செய்து வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com