மண்டபம் அருகேகடலில் மூழ்கி சிறுமி பலி

மண்டபம் அருகே கடலில் மூழ்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மண்டபம் அருகே கடலில் மூழ்கி சிறுமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அடுத்துள்ள பெரியபட்டினம் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த அனீஸ், பாத்திமா மகள் சுலைஹா (7). இவா் 2 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா்கள் அனைவரும் மண்டபம் அருகே உள்ள சீனியப்பா தா்ஹாவுக்கு தொலுகை நடத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை வந்தனா். தொலுகை முடிந்ததும் அவா்கள் தா்ஹாவுக்குள் இருந்தனா். அப்போது சுலைஹாவை மட்டும் காணவில்லையாம். இதையடுத்து பெற்றோா் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் தேடிப் பாா்த்தும் அவா் கிடைக்கவில்லை. இதைத் தொடா்ந்து கடலோர பாதுகாப்பு குழுக் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினா் கடலுக்குள் தேடிய போது சுலைஹா சடலமாக மீட்கப்பட்டாா்.

இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com