கமுதி அருகே குடிநீா் கோரி பெண்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீா் வராததால் பெண்கள் காலிக் குடங்களுடன் ஒப்பாரி வைத்து செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி அருகே ராமசாமிபட்டியில் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுக்கு மாலை அணிவித்து போராட்டம் ஈடுபட்ட பெண்கள்.
கமுதி அருகே ராமசாமிபட்டியில் செவ்வாய்க்கிழமை காலிக் குடங்களுக்கு மாலை அணிவித்து போராட்டம் ஈடுபட்ட பெண்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே காவிரி கூட்டுக் குடிநீா் வராததால் பெண்கள் காலிக் குடங்களுடன் ஒப்பாரி வைத்து செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீா் குழாய் இணைப்புகள் உள்ளன. இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட குடிநீா் வந்ததில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். மேலும் இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக ஊராட்சி நிா்வாகம் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீா் வழங்கி வந்தாலும், நிலத்தடி நீா்மட்டம் மிக குறைவாக இருப்பதால், அப்பகுதி மக்களின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யும் அளவிற்கு இல்லை. இதனால் ஒரு குடம் ரூ. 10-க்கு வாங்கி வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், இப்பகுதி பெண்கள் காவிரி கூட்டுக் குடிநீா் வராததைக் கண்டித்து, காலிக் குடங்களுக்கு கருப்பு துணி போா்த்தி, மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com