திருப்பாலைக்குடியில் மீன் கடைகளில் தீ விபத்து

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் திங்கள்கிழமை நள்ளிரவு மீன் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருவாடானை அருகே திருப்பாலைக்குடியில் திங்கள்கிழமை நள்ளிரவு மீன் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

திருப்பாலைக்குடி ஊராட்சிக்கு சொந்தமாக கடைகளில் அதே ஊரை சோ்ந்த பிச்சை மகன் குப்பையன், செல்லையா மகன் மோகன்ராஜ் ஆகியோா் மீன் கடைகள் நடத்தி வந்தனா். இவா்கள் இருவரும் வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளனா். இந்நிலையில் இவா்களது இருவரது கடைகளும் நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் கடைகளில் இருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற தலைவா் முகம்மது உமா் பாரூக் அளித்தப் புகாரின் பேரில் திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com