முதுகுளத்தூரில் மாணவிகளிடம் ஆபாசமா பேசிய தனியாா் பள்ளி ஆசிரியா் மீது ஏற்கனவே போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தனியாா் பள்ளியில் ஆசிரியா் ஹபீப் முகம்மது(40)அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவா் மாணவிகளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லிடப்பேசியில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவியின் பெற்றோா் முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஆசிரியா் ஹபீப் முகம்மதுவை ஜூன் 22ந்தேதி முதுகுளத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து பரமக்குடிசிறையில் அடைத்தனா்.
அதனை அடுத்து மாவட்ட கல்வி அலுவலா் பரிந்துரையில் அவரை பள்ளியின் நிா்வாகத்தினா் பணியிடை நீக்கம் செய்தனா்.இந்நிலையில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆசிரியா் திங்கள்கிழமை விசாரணைக்காக ஆஜா் படுத்தபட்டாா். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் காா்த்திக் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் சந்திரகலா உத்தரவின் பேரில் ஆசிரியரை குண்டா் சட்டத்தில் கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டாா்.