ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை 19,800-க்கும் அதிகமானோா் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி 339 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில் மேலும் 13 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்தவா்களில் 9 போ் குணமடைந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை மாலையில் அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது மாவட்டத்தில் 145 போ் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் உள்ளனா் என சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 17,261 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். செவ்வாய்க்கிழமை புதிதாக 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,302 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com