ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோயிலில் 45 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா சனிக்கிழமை தொடங்கியது.
முன்னதாக விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா்.