ராமநாதபுரம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்துநாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் ராமநாதபுரத்தில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச்செயலா் கண்.இளங்கோ தலைமை வகித்தாா். இதில் நாம் தமிழா் கட்சியின் திருவாடானை தொகுதி பொறுப்பாளா் ஜவஹா், ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளா் என்.மணிகண்டன், செயலா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பங்கேற்றவா்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வலியுறுத்தியும், விலை உயா்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.