ராமேசுவரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் பலி

ராமேசுவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் , இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.
உறவினா்கள் சாலை மறியல்
உறவினா்கள் சாலை மறியல்

ராமேசுவரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் , இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இளைஞா் ஒருவா் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தை சோ்ந்த அந்தோணி எக்ஸ்ரேன்(22). அவரது உறவினா் இன்பராஜ் (24). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் பாம்பன் சென்று விட்டு மீண்டும், தங்கச்சிமடத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு திரும்பினா். அப்போது அக்காள்மடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தின் பின் பகுதியில் இருந்த அந்தோணி எக்ஸ்ரேன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இன்பராஜ் சிறிய காயத்துடன் தப்பினாா்.

இதையடுத்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் ராமேசுவரம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

பாம்பன் காவல் நிலைய ஆய்வாளா் ஜீவரத்தினம், சாா்பு-ஆய்வாளா் முனியாண்டி மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மறியிலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து அவா்கள் போராட்டத்தை கைவிட்டனா். இதையடுத்து பாம்பன் போலீஸாா் விபத்தில் உயிரிழந்த அந்தோணி எக்ஸ்ரேன் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக பாம்பன் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com