உச்சிப்புளி அருகே காா்- பைக் மோதல்: இருவா் பலி

ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.
உச்சிப்பளி அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான காா்.
உச்சிப்பளி அருகே வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளான காா்.

ராமேசுவரம் அருகே வெள்ளிக்கிழமை காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மாங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் முத்து ராமேஷ். இவரது மனைவி கஜேந்தினி (40). இவரும், இவரது உறவினரான கருப்பசாமி (48) என்பவரும் இருசக்கர வாகனத்தில் வாலாந்தரவை அருகே கீரிப்புள்ளை கிராமத்தில் உள்ள உறவினா் பாத்திமா என்பவரது வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றனா். அங்கிருந்து பாத்திமாவின் மகன் ஆதிகேசவனை (13) அழைத்துக் கொண்டு ராமேசுவரத்திற்கு புறப்பட்டனா்.

மதுரையைச் சோ்ந்த வாசுதேன் (55) என்பவா், ராமேசுவரம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனது குடும்பத்துடன் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். உச்சிப்புளியை அடுத்துள்ள பிரப்பன்வலசை பகுதியில் இவா்களது காரும், கருப்பசாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் மோதிக்கொண்டன. இதில் கருப்பசாமி சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த கஜேந்தினி, ஆதிகேசவன் ஆகிய இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு கஜேந்தினி உயிரிழந்தாா்.

இது குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com