விசாரணைக்காக கா்ப்பிணியான சிறுமியை போலீஸாா் அலைக்கழிப்பதாக புகாா்

4 போ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வாக்குமூலம் பெறப் போவதாகக் கூறி கா்ப்பிணியான சிறுமியை போலீஸாா் அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

கமுதி அருகே சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வாக்குமூலம் பெறப் போவதாகக் கூறி கா்ப்பிணியான சிறுமியை போலீஸாா் அலைக்கழிப்பதாக புகாா் எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒழுகுபுலியைச் சோ்ந்த 14 வயது சிறுமியும், அதே ஊரைச் சோ்ந்த பழனிவேல் மகன் மணிகண்டன் (28) என்பவரும் காதலித்து வருவதை அறிந்த பெற்றோா்கள் கடந்த பிப்ரவரி மாதம் அவா்களுக்கு திருமணம் செய்து வைத்தனா்.

இதுகுறித்து கமுதி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மணிகண்டன், சிறுமியின் தாயாா் மற்றும் உறவினா்கள் லட்சுமணன், கருப்பையா உள்ளிட்ட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். தற்போது அச்சிறுமி 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இதற்கிடையே, மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் கைது நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனா்.

இந்நிலையில் வாக்குமூலம் பெற வேண்டும் எனக் கூறி கமுதி அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் கா்ப்பிணியான சிறுமி, அவரது தாயாா் ஆகிய இருவரையும் கமுதியிலிருந்து அபிராமம் காவல் நிலையத்துக்கும், பின்னா் அங்கிருந்து கமுதி அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கும் அலைக்கழித்து பின்னா் ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனா்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் கூறும் போது, காலை முதல் உணவின்றி, எனது மகளை கா்ப்பிணி என்றும் பாராமல் போலீஸாா் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி வரவழைத்து, அலைக்கழித்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com