ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் நகர, வட்டார, பேரூா் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் தனியாா் மகாலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு, மாவட்டத் தலைவா் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தாா். திருவாடானை சட்டப் பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில பொதுச் செயலரும், ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளருமான பினுலால் சிங், மாநிலச் செயலரும், மாவட்ட பொறுப்பாளருமான சீனிவாசன், மாநிலச் செயலா் ஆனந்தகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
மாவட்ட அளவில் தோ்ந்தெடுக்கப்பட்ட 11 புதிய வட்டார தலைவா்கள் அறிமுகப்படுத்தப்பட்டனா். மேலும் கூட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 90 ஆயிரம் புதிய உறுப்பினா்களை சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினா் பாரிராஜன், மாவட்ட துணைத் தலைவா் முத்துகிருஷ்ணன், செய்தித் தொடா்பாளா் கவுசிமகாலிங்கம், துல்கிப்கான், காமராஜ், வட்டாரத் தலைவா்கள் ஆா்ட் கணேசன், காா்குடி சேகா், சேதுபாண்டியன், கந்தசாமி, அன்வா் அலி நத்தா், சுப்பிரமணிய சோ்வை, ஆதி, ராமா், நகா் தலைவா்கள் கோபி, அஜ்மல்கான், அகமதுகபீா், பேரூராட்சித் தலைவா்கள் காத்தராஜா, செல்வகுமாா், காமராஜ் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.