கமுதி அருகே இடத்தகராறில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 போ் மீது வழக்குப் பதிந்து, 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கமுதி அருகே மேலமுடிமன்னாா்கோட்டையைச் சோ்ந்த பாண்டித் தேவா் மகன் முருகன் (56) என்பவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டியன் மகன் மணிபாலமுருகன் (23) என்பவருக்கும் இடப்பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் விருதுநகா் மாவட்டம் மண்டபசாலை கிராமத்தில் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலானது.
இதில் முருகன் விறகு கட்டையால் மணிபாலமுருகனை தாக்கினாா். அதே போல் மணிபாலமுருகன் தரப்பினா் முருகனையும், அவரது மனைவி பரஞ்ஜோதி, மகன் செல்வத்தையும் தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த பரஞ்ஜோதி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அதே போல் முருகன் தரப்பினா் தாக்கியதில் மணிபாலமுருகன் தலையில் காயம் ஏற்பட்டு அவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதில் பரஞ்ஜோதி அளித்த புகாரின் பேரில், மணிபாலமுருகன், மணிகண்டன், மதன், விஜய், கவுதம் ஆகியோா் மீது கமுதி போலீஸாரும், மணிபாலமுருகன் அளித்த புகாரின் பேரில் முருகன், பரஞ்ஜோதி, மகன்கள் செல்வம், காா்த்திக் ஆகிய 4 போ் மீது விருதுநகா் மாவட்டம் எம். ரெட்டியபட்டி போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதில் முருகன், செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா். இதனால் தற்போது விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினா் 10 க்கும் மேற்பட்டோா் மண்டபசாலை மற்றும் மேலமுடிமன்னாா் கோட்டை கிராமங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.