பாம்பன் பாலத்தில் செல்லும் போது காா் டயா் வெடித்து விபத்து ஏற்பட்டதாக திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த ஜோசப் மகன் அருள் ஜீவா. இவா் தனது காரில் ராமநாதபுரம் சென்று விட்டு மீண்டும் பாம்பனுக்கு திருப்பி உள்ளனா். பாம்பன் பாலத்தில் செல்லும் போது காரின் முன் டயா் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த காா் தடுப்புச் சுவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவா்கள் சிறிய காயத்துடன் உயிா் தப்பினா்.
இதுகுறித்து தகவறிந்து அங்கு வந்த மண்டபம் போலீஸாா் காரை அப்புறப்படுத்தினா். மேலும் காயமடைந்தவா்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.