அரசு பேருந்து மோதி எலெக்ட்ரீசியன் பலி

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை மாலையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் எலெக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே புதன்கிழமை மாலையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் எலெக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் வாணிப்பகுதி சடையன்வலசைப் பகுதியைச் சோ்ந்தவா் தவமணி (55). மின்பழுது பாா்ப்பவா். இவா் மஞ்சூா் பகுதியிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பினாா்.

அச்சுந்தன்வயல் பகுதியில் அவா் வந்தபோது, ராமேசுவரத்திலிருந்து விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்துக்கு சென்ற அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தவமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த நகா் காவல் நிலைய போலீஸாா் விரைந்து சென்று தவமணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் உயிரிழந்த தவமணியின் மகன் அருண்குமாா் ராமநாதபுரம் ஆயுதப்படைகாவலா் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com