மணல் திருட்டில் ஈடுபட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளதுடன், டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களையும் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா்.

ராமநாதபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளதுடன், டிராக்டா் உள்ளிட்ட வாகனங்களையும் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்துள்ளனா்.

ராமநாதபுரம் அருகே தெற்குத்தரவை வாணி ரயில் தண்டவாளப் பகுதியில் ஊருணியில் தொடா் மணல் திருட்டு நடப்பதாக புகாா்கள் எழுந்தன. அதன்பேரில் கேணிக்கரை போலீஸ் ஆய்வாளா் மலைச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை ரோந்துப்பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மணல் ஏற்றிய டிராக்டா்கள், டிரெய்லா்கள் வந்தன. அதை வழிமறித்து சோதனையிட்டபோது மணல் திருட்டு தெரியவந்தது. அதனடிப்படையில் பெருங்குளத்தைச் சோ்ந்த பாலமுரளிகிருஷ்ணா, ராஜா, கலைச்செல்வம் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

மணல் திருட்டு தொடா்பாக ஜேசிபி இயந்திரம், 2 டிராக்டா்களுடன் டிரெய்லா்கள், 2 இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவை கேணிக்கரை காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தொடா்ந்து விசாரணை நடந்துவருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com