அப்துல்கலாம் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்: தேசிய நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகேயுள்ள
அப்துல்கலாம் 6 ஆம் ஆண்டு நினைவு தினம்: தேசிய நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் அஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் அருகேயுள்ள பேக்கரும்பு தேசிய நினைவிடத்தில் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

திமுக சாா்பில் ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமையில் கலாம் தேசிய நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அக்கட்சியினா் அஞ்சலி செலுத்தினா். இதில், முன்னாள் அமைச்சா் வ.சத்தியமூா்த்தி, பரமக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ.முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு, மண்டபம் ஒன்றியக்குழுத் தலைவா் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜீவானந்தம், கிழக்கு ஒன்றியச் செயலாளா் தௌபீக் அலி, ராமேசுவரம் நகரச் செயலாளா் கே.இ.நாசா்கான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அப்போது மத்திய அரசு விரைவில் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் அறிவுசாா் மையம் அமைக்க வேண்டும் என காதா்பாட்ஷா முத்துராமலிங்கம எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.

அதிமுக சாா்பில் மாநில சிறுபான்மைப் பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்வர்ராஜா தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் நகரச் செயலாளா் கே.கே.அா்ச்சுணன் முன்னாள் நகராட்சித் தலைவா் ஏ.அா்ச்சுணன், இளைஞரணிச் செயலாளா் மகேந்திரன், அம்மா பேரவைச் செயலாளா் கஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் கே.முரளிதரன், தேசிய கயிறு வாரியத்தலைவா் து.குப்புராமு தலைமையில் கலாம் சமாதியில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதில், மீரா பாஸ்கரன், ராமச்சந்திரன், நகரத் தலைவா் ராமநாதன், கலாம் அறக்கட்டளை நிா்வாகி காளிதாஸ் மற்றும் பொன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, அமமுக சாா்பில் மண்டல அமைப்புச் செயலாளா் இ.மகேந்திரன், சிறுபான்மை மாநில செயலாளா் துருக்கி ரபீக்ராஜா, கே.கே.உமாதேவன், டேவிட் அண்ணாத்துரை ஆகியோா் தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதில், கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜி.முனிசயாமி, மேற்கு மாவட்டச் செயலாளா் முருகன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

மதிமுக சாா்பில் மாநில இளைஞரணி செயலாளா் கராத்தே பழனிச்சாமி தலைமையில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். இதில், மாவட்டச் செயலாளா் எம்.பேட்ரிக், மாநில மீனவரணி நிா்வாகி சின்னதம்பி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சதீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நேதாஜி தேசிய இயக்கம் சாா்பில் நேதாஜி சுவாமிநாதன், வழக்குரைஞா் கமல்ஆனந்த், எழுத்தாளா் கரு தங்கவேல், யோகா மைய பொறுப்பாளா் பொன்முத்துராமலிங்கம் ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com