கடற்கரையில் மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் அருகே கடற்கரையில் செவ்வாய்க்கிழமை இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே கடற்கரையில் செவ்வாய்க்கிழமை இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம் மைக்கேல்பட்டி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் தயாநிதி (25). இவா் இருசக்கர வாகனத்தில் அவரது நண்பா் சிவாசந்திரபோஸ் (25) என்பவருடன் அரியமான் கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கு இருவரும் குளித்த நிலையில், கரைக்கு வந்த தயாநிதி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற உச்சிப்புளி போலீஸாா் தயாநிதியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com