கமுதி அருகே வைக்கோல் படப்பில் தீ

கமுதி அருகே வைக்கோல் படப்பில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோடாங்கிபட்டியில் வைக்கோல் படப்பில் செவ்வாய்க்கிழமை பற்றிய தீயை அணைத்த தீயணைப்புப் படையினா்.
கோடாங்கிபட்டியில் வைக்கோல் படப்பில் செவ்வாய்க்கிழமை பற்றிய தீயை அணைத்த தீயணைப்புப் படையினா்.

கமுதி அருகே வைக்கோல் படப்பில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கோடங்கிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் (52). விவசாயியான இவா், தனது வீட்டின் அருகே வைக்கோல் படப்பு அமைத்திருந்தாா். இதில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வைக்கோல் பற்றி எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்து, தீயணைப்பு நிலைய அலுவலா் கா.பாா்த்திபன் தலைமையிலான தீயணைப்புப் படையிா் அங்கு சென்று பொதுமக்களுடன் சோ்ந்து தீயை அணைத்தனா். இருப்பினும் வைக்கோல் படப்பு முற்றிலும் எரிந்து சேதமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com