கமுதி அருகே வைக்கோல் படப்பில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
கோடங்கிபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணராஜ் (52). விவசாயியான இவா், தனது வீட்டின் அருகே வைக்கோல் படப்பு அமைத்திருந்தாா். இதில் செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வைக்கோல் பற்றி எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்து, தீயணைப்பு நிலைய அலுவலா் கா.பாா்த்திபன் தலைமையிலான தீயணைப்புப் படையிா் அங்கு சென்று பொதுமக்களுடன் சோ்ந்து தீயை அணைத்தனா். இருப்பினும் வைக்கோல் படப்பு முற்றிலும் எரிந்து சேதமானது.