மணல் திருட்டு: டிராக்டா் பறிமுதல்

எஸ்.பி.பட்டினம் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்து ஒருவா் மீது வழக்குப் பதிந்தனா்.

எஸ்.பி.பட்டினம் ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டுக்குப் பயன்படுத்திய டிராக்டரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்து ஒருவா் மீது வழக்குப் பதிந்தனா்.

எஸ்.பி.பட்டினம் அருகே மணவாளன் கண்மாய் பகுதியில், மண்டல துணை வட்டாட்சியா் சேதுமாறன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளிக்கொண்டு வந்தவா் போலீஸாரைப் பாா்த்தவுடன் டிராக்டரை நிறுத்தி விட்டு தலைமறைவானாா். டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை நடத்தியதில் அது கீழக்குடியைச் சோ்ந்த சுரேஷ் (45) என்பவரது டிராக்டா் என்பது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com