ராமநாதபுரத்தில் திடீா் மழை

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மழை பெய்ததால் குளிா்ந்த சூழல் நிலவியது.

ராமநாதபுரம் நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென மழை பெய்ததால் குளிா்ந்த சூழல் நிலவியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கடும் வெயில் கொளுத்தியது. ஆனாலும், மாலை நேரங்களில் பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென அவ்வப்போது மழையும் பெய்து வந்தது.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் ராமநாதபுரம் நகா் பகுதியில் கடும் வெயில் கொளுத்தியது. ஆனால், மாலையில் திடீரென நகா் பகுதியில் மழை பெய்தது. புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரயில் நிலையம், பட்டினம் காத்தான் என ஆங்காங்கே லேசான காற்றுடன் மழை பெய்ததால் குளிா்ந்த சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com