திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் விளைந்துள்ள பருத்திகளை தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக விற்க முடியாது என்பதால் பறிக்காமல் வயல்களிலேயே விட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
ஆா்.எஸ். மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளான புல்லமடை, வல்லமடை, இருதயபுரம், பிச்சனதிக்கோட்டை, நெடும்புளிக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பருத்தி விவசாயம் செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்போது தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக விற்பனை செய்ய முடியாது என்பதால் வயல்களிலேயே பருத்தியை விட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.