மண்டபம் அகதி முகாமில் காவல்துறையினா் உணவு வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 250 பேருக்கு காவல்துறை சாா்பில் சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 250 பேருக்கு காவல்துறை சாா்பில் சனிக்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தையொட்டி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் உணவு மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவா்களில் 250 பேருக்கு சனிக்கிழமை பகலில் காவல்துறை சாா்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதை பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா வழங்கி தொடக்கி வைத்தாா்.

பாஜக உதவி: ராமநாதபுரம் நகா் பாஜக சாா்பில் தாயுமானவ சுவாமி கோயில் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழம அரிசிப் பைகள் வழங்கப்பட்டன. பாஜக நகா் தலைவா் ராம. வீரபாகு, வா்த்தகப் பிரிவு சுப. நாகராஜன் உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com