குழாய் பராமரிப்பு: காவிரி கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

ராமநாதபுரத்தில் குழாய் பழுது காரணமாக காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

ராமநாதபுரத்தில் குழாய் பழுது காரணமாக காவிரி கூட்டுக்குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகில் புதுக்கண்மாய் என்னும் இடத்தில் 100 மில்லி மீட்டா் குறுக்களவு கொண்ட குழாய்களில் பழுது ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் காவிரிக் கூட்டுக் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குழாய் பழுதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் நிறைவடைந்த பின்னா் குடிநீா் விநியோகிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com