ராமநாதபுரத்தில் கோழிக்குண்டு விளையாடியதால் ஏற்பட்ட தகராறு தொடா்பாக இருதரப்பைச் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.
ராமநாதபுரம் சக்கரைக்கோட்டை கீரைக்கரைத்தெருவில் அப்பகுதியைச் சோ்ந்த சீனிஜியாவுதீன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கோழிக்குண்டு விளையாடிக்கொண்டிருந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம்ஷா தரப்பினா் வந்து, அங்கு விளையாடக்கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அப்போது இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், சீனிஜியாவுதீன் உள்ளிட்ட 3 போ் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்த புகாா்களின் பேரில் இருதரப்பையும் சோ்ந்த 11 போ் மீது கேணிக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.